Sort by:
57 products
57 products
ஆடாதொடை மணப்பாகு - சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கு மூலிகை மருந்து
ஆடாதொடை மணப்பாகு - சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கு மூலிகை மருந்து
இருமல், சளி அல்லது மூச்சுத் திணறலுடன் போராடுகிறீர்களா?
இருமல் நெஞ்சு சளியால் தூக்கம் இல்லாத இரவுகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இனி கவலைப்பட தேவையில்லை நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த இயற்கை நிவாரணி இதோ, ஆடாதொடை இலை, உலர் இஞ்சி,மிளகு ,சீரகம் , தாலிசபத்ரி, அதிமதுரம், திப்பிலி போன்ற 20 மேற்பட்ட பாரம்பரிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆடாதோடை மணப்பாகு சளி தொல்லை இல்லாத நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது.
ஆடாதோடை மணப்பாகு பயன்கள்
🌿சளி மற்றும் காய்ச்சல் தீவிரத்தை குறைக்க வல்லது.
🌿பருவகால மாற்றங்களின் போது தொண்டையில் ஏற்படும் அசௌகரியம் தணிக்க உதவுகிறது
🌿வறட்டு இருமலை குறைத்து நிம்மதியான மூச்சுவிட உதவுகிறது
🌿குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆடாதொடை சிறந்த நிவாரணையாக ஆற்றல் புரியும்
💚 ஆடாதோடை மணப்பாகுவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
குளிர் காலநிலை, மாறிவரும் பருவநிலை அல்லது நீடித்த சுவாசப் பிரச்சினைகளால் போராடுபவர்களுக்கு கண்டிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய இயற்கை நிவாரணி நமது ஆடாதோடை மணப்பாகு. சிறியவர் முதல் பெரியவர் வரை பக்க விளைவுகள் இல்லாமல் பயன்படுத்தலாம்.
👉 நிம்மதியாக சுவாசிக்க தயாரா?
இன்றே வாங்கி பயன்படுத்திப்பாருங்கள் சளித்தொல்லை மற்றும் மூச்சடைப்பிலிருந்து விடுதலைப் பற்றி நிம்மதியான சுவாசத்தை பெற்றிடுங்கள்
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவரை அணுகலாம் : 9487261280
அகில் குளியல் பொடி - ஆரோக்கியமான சருமம் மற்றும் பொலிவு
அகில் குளியல் பொடி - ஆரோக்கியமான சருமம் மற்றும் பொலிவு
அகில் மூலிகை குளியல் பொடி - பொலிவான சருமத்திற்கு
100 சதவீதம் இயற்கையான சிவப்பு சந்தனம், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் மற்றும் ரோஜா போன்ற பாரம்பரிய இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட அகில் குளியல் பொடி சருமத்தை பாதுகாத்து பொலிவுபெறச்செய்து இயற்கையான மணம் கமிழ செய்கிறது.ரசாயனம் அல்லாத இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
💚அகில் குளியல் பொடியின் பொலிவான பயன்கள்
🌿சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது
🌿இயற்கையாகவே நோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால் சருமத்தின் மீதான பாக்டீரியா தொற்றை தடுக்க உதவுகிறது
🌿சிவப்பு சந்தனம் மற்றும் சந்தனம் இயற்கையான பொலிவை சருமத்திற்கு ஊக்குவிக்கிறது
🌿உணர்திறன் மிக்க சருமத்திற்கு எந்தவித அழற்சியும் கொடுக்காமல் மென்மையாக வேலை செய்யும்
🌿சரும பிரச்சனைகள் எதுவாயினும் தாராளமாக பக்கவிளைவுகள் இல்லாமல் பயன்படுத்தலாம்
🌸நான் ஏன் இதனை தேர்வு செய்ய வேண்டும்?
முதல் தரத்தில் பெறப்பட்ட சிவப்பு சந்தனம் மற்றும் சந்தன கட்டைகளை பக்குவப்படுத்தி பொடியாக்கி எமது அகில் குளியல் பொடியில் சேர்க்கிறோம். இதில் எந்தவித சமரசமும் செய்யவில்லை. எங்கள் குளியல் பொடி விலை சற்று அதிகமாக இருப்பதாக உணரப்படலாம் இதற்கு காரணம், முதல் தரத்தில் பெறப்பட்ட சந்தன கட்டைகள் விலை சற்று அதிகமாகவே உள்ளதால் எங்களால் முடிந்த அளவு விலை குறைப்பு செய்து உங்களுக்கு வழங்குகிறோம்.
🛁எப்படி பயன்படுத்துவது?
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அகில் குளியல் பொடியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போன்று குழைத்து கொள்ளவும் பின்பு சருமத்தின் மீது மென்மையாக தேய்த்து குளிக்கலாம்
அகில் சோப்புடன் சுத்தமான, பளபளப்பான சருமத்தைப் பெறுங்கள்
அகில் சோப் என்பது உங்கள் சருமத்தை சுத்தம் செய்யவும், ஈரப்பதத்தை அளிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் வடிவமைக்கப்பட்ட, இயற்கையான, கையால் செய்யப்பட்ட சோப் ஆகும். சந்தனம் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட இது, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியை குறைக்க உதவுகிறது. மேலும், உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஏன் அகில் சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
🧴 இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமத்துளைகளைச் சுத்தம் செய்து செம்மையாக்குகிறது
🌿 எண்ணெய் சருமத்தை சுத்தம் செய்து பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது
💧 வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது மற்றும் சேதமடைந்த சருமத்தை புத்துயிர் பெற செய்ய உதவுகிறது
✨ சருமத்தை இறுக்கமாகவும் மற்றும் இளமையான நிறத்தை அளித்து, இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
💁 அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது மென்மையானது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பானது.
💆 அரிக்கும் தடிப்புகள், தேமல், படை, சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்றவற்றுக்கு உதவுகிறது.
எங்கள் சோப்பை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
🌱 100% ரசாயனங்கள் இல்லாதது: தூய்மையான, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த சோப்பில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், செயற்கை வாசனை திரவியங்கள் அல்லது சாயங்கள் இல்லை.
🌍 சுற்றுச்சூழலுக்கு உகந்தது : சுற்றுச்சூழலுக்கு உகந்த பொட்டலம் பயன்படுத்துகிறோம்.
🌿 தூய்மையானது : உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து வகை சருமத்திற்கும் இது பாதுகாப்பானது.
பயன்படுத்தும் முறை:
- உங்கள் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, சரும துவாரங்களைத் திறக்கச் செய்யவும்.
- சோப்பை கைகளுக்கு இடையே அல்லது நேரடியாக சருமத்தின் மீது தேய்த்து அடர்த்தியான நுரை வரச் செய்யவும்.
- அந்த நுரையை முகம் அல்லது உடல் முழுவதும் மென்மையாக வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.
- பிறகு, துவாரங்களை மூடவும், சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்.
💬சரி, அல்கண்ணா தேன் இதழ் (Alkanna Lip Balm) என்பது என்ன ?
உங்கள் உதடுகளை மென்மையாகவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை கொடுத்து அழகு பெற செய்யவும் 100% இயற்கையான பொருட்களான, வேம்பாளம் பட்டை, ஆமணக்கு எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், பண்ணீர் ரோஜா மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றைக் கொண்டு எந்த வித ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட உதட்டு மெழுகு (Lip Balm)
💖அப்படி என்ன இதன் சிறப்பு ?
வேம்பாள பட்டையின் (Alkanna tinctoria) தனித்துவம் என்னவென்றால் இதில் இயற்கையான சிவப்பு நிறமி கொண்ட காரணிகள் உள்ளதால் இது உதட்டின் உள்ளே உருவி சென்று இளம் சிவப்பு நிறத்தை தரக்கூடியது அது மட்டும் அல்லாமல் இந்த பட்டையில் நோய் எதிர்ப்பு பண்பு அதிகமாக உள்ளதால் உங்கள் உதட்டிற்கு நிறமூட்டுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது.இதில் பயன்படுத்தப்பட்ட தேன் மெழுகு உங்கள் வெடித்த உதட்டிற்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு மினுமினுப்பான உதட்டினை பெற உதவுகிறது
👧🏻இதை யார் பயன்படுத்தலாம்?
மென்மையான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் வேண்டுவோர் எவரும் பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த உதட்டுச் சாயங்களை பயன்படுத்தி அவதிக்குள்ளானவர்கள் நமது தேன் மெழுகினை தாராளமாக பயன்படுத்தலாம் ஏனெனில் இதில் எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நான் இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
குளித்த பிறகு அல்லது உங்கள் உதடுகள் வறண்டதாக உணரும் எந்த நேரத்திலும் தடவவும்இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்துவது சிறந்ததுஅழகு தோரணைக்காக நீங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்
🌱இது உண்மையில் இயற்கையானதா?
ஆம்! பாரம்பரிய இயற்கை அறிவைக் கொண்டு மூலிகை வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட இந்த இயற்கையான உதட்டு மெழுகு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம் எந்தவித பக்கவிளைவும் இல்லை.
குறிப்பு : வாய் வழியாக உட்கொண்டாலும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது மாறாக ஊட்டசக்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது
அன்றாட சருமப் பராமரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று, ஏன்?
தூய கற்றாழை சாறு, குங்குமப்பூ மற்றும் சிவப்பு சந்தனம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்தக் குழுமம் அழகு பராமரிப்பு மட்டுமின்றி தோல் பராமரிப்புகளையும் சிறப்பாக செய்கிறது. இதில் எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படாததால் எந்தவித பக்க விளைவும் இல்லை எனவே ரசாயனம் கலந்த ஜெல்-க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
✨அற்புதமான பயன்கள்
🌿வறண்ட சருமத்திற்கு மென்மை ஊட்டி பொலிவாக இருக்க உதவுகிறது
🌿தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை தழும்புகள் மெதுவாக மறைய உதவி புரியும்
🌿தோல் அரிப்பு மற்றும் தோல் அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்துவதால் இதிலிருந்து மீண்டு வரலாம்
🌿முகப்பரு மற்றும் சூட்டினால் வரும் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உதவி புரியும்
🌿வெட்டு காயம் மற்றும் சூடான எண்ணெய், வெந்நீரால் ஏற்படும் தீக்காயம் மற்றும் அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் பயன்படுத்தலாம்
வழக்கமான மாய்ஸ்ரைசர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மிக முக்கியமான ஒன்று, இது 100% இயற்கையானது எனவே எந்த வித பக்கவிளைவும் இல்லை. அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது, இது அழகு பராமரிப்பு மட்டும் இன்றி தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவி புரிவதோடு மட்டுமல்லாமல் காயங்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
👉 சரும பராமரிப்பை இன்றே தொடங்குங்கள்
கற்றாழை குங்குமா ஜெல், பசை போன்றோ அல்லது எண்ணெய் போன்றோ பிசுபிசு தன்மையுடன் இருக்காது. எளிதில் சருமத்தில் ஊடுருவி மென்மையான உணர்வை கொடுக்கும் என்பதால் தயக்கம் வேண்டாம் இது அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.
கற்றாழை சோப் - ஈரப்பதம் அளிக்கும் மென்மையான சருமப் பராமரிப்பு
கற்றாழை சோப் - ஈரப்பதம் அளிக்கும் மென்மையான சருமப் பராமரிப்பு
இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்து, இதமான புத்துணர்ச்சி பெறுங்கள்
எங்கள் கற்றாழை சோப், தூய கற்றாழை ஜெல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்கள் சருமத்திற்கு ஆழமான நீர்ச்சத்தையும், மென்மையான சுத்தப்படுத்துதலையும் வழங்குகிறது. அதன் குளிர்ச்சியான மற்றும் இதமளிக்கும் பண்புகள், உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, எரிச்சலைத் தணித்து, மென்மையாகவும், மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது, பெரும்பாலான சரும வகைகளுக்கும் உகந்தது.
இயற்கை பராமரிப்புடன் தினசரி ஈரப்பதம்
💧 ஆழமான ஈரப்பதம் - சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.
❄️ சூரிய ஒளியால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் காயங்களுக்கு – அதன் இயற்கையான குளிர்ச்சி சருமத்தை மென்மையாக்கி பாதுகாக்க உதவுகிறது.
✨ இளமையான சருமத்திற்கு துணை – வைட்டமின்கள் C, E மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது, இது சருமத்தில் உண்டாகும் மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது.
🌿 மென்மையான முகப்பரு பராமரிப்பு – நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவான தோற்றத்திற்கு உதவுகிறது.
🌸 கறைகள் மற்றும் தழும்புகளை குறைக்கும் – தழும்புகள், பிரசவ தழும்புகள் மற்றும் கருமையான புள்ளிகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
எங்கள் சோப்பை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
🌱 100% ரசாயனங்கள் இல்லாதது: தூய்மையான, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த சோப்பில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், செயற்கை வாசனை திரவியங்கள் அல்லது சாயங்கள் இல்லை.
🌍 சுற்றுச்சூழலுக்கு உகந்தது : சுற்றுச்சூழலுக்கு உகந்த பொட்டலம் பயன்படுத்துகிறோம்.
🌿 தூய்மையானது : உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து வகை சருமத்திற்கும் இது பாதுகாப்பானது.
பயன்படுத்தும் முறை:
- உங்கள் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, சரும துவாரங்களைத் திறக்கச் செய்யவும்.
- சோப்பை கைகளுக்கு இடையே அல்லது நேரடியாக சருமத்தின் மீது தேய்த்து அடர்த்தியான நுரை வரச் செய்யவும்.
- அந்த நுரையை முகம் அல்லது உடல் முழுவதும் மென்மையாக வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.
- பிறகு, துவாரங்களை மூடவும், சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்.
தேன் மற்றும் துருவல் செய்யப்பட்ட நெல்லிக்காய் கலவை
வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய் மற்றும் இயற்கையான தேன். இவை இரண்டும் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி, சருமப் பொலிவு மற்றும் செரிமானம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகின்றன. உடலுக்கு ஊட்டச்சத்துடனும், ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு கரண்டி போதுமானது!
✨எங்கள் தேன் நெல்லிக்காய் ஏன் தனித்துவமானது?
உலர்ந்த அல்லது முழு நெல்லிக்காயைப் பயன்படுத்தும் தயாரிப்புகளைப் போலல்லாமல், நாங்கள் நெல்லிக்காயைத் துருவி பின்னர் தேனுடன் கலக்கிறோம். இது தேனை நெல்லிக்காயின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக ஊடுருவச் செய்கிறது. இதன் மூலம், ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது அதிகரிப்பதுடன், ஒவ்வொரு கரண்டியிலும் சிறந்த சுவையையும் அனுபவிக்க முடியும்.
தேன் நெல்லிக்காய் பயன்கள்
🌿 நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் C மற்றும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தி தேவையான ஆற்றலையும் தருகிறது
🌿 சருமத்திற்குப் பொலிவு
சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்து, ஃப்ரீ ரேடிக்கல்களை (செல்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகள்) எதிர்த்துப் போராட உதவுகிறது. இதை நீங்கள் இயற்கையான ஃபேஸ் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம்!
🌿 ஆரோக்கியமான முடி வளர்ச்சி
இது கூந்தல் வேர்களுக்கு ஊட்டமளித்து, முடிக்கு இயற்கையான பொலிவையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது.
🌿ஆரோக்கியமான செரிமானம்
இது செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
🌿வலுவான எலும்புகள்
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன.
🌿 சளி மற்றும் இருமல்
தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டும் இயற்கையாகவே தொண்டையை இதமாக்கி, சளி மற்றும் இருமல் அறிகுறிகளைத் தணிக்க உதவுகின்றன.
❤️எங்கள் தேன் நெல்லிக்காய் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- 100% இயற்கையான பொருட்கள்
- செயற்கை சுவையூட்டிகள் அல்லது நிறமிகள் இல்லை
- சிறிய தொகுதிகளாகத் தயாரிக்கப்படுகிறது (Small Batches)
- தரமான நெல்லிக்காய் மற்றும் இயற்கையான தேன் கொண்டு தயாரிக்கப்பட்டது
- சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது
🍽️பயன்படுத்தும் முறை
தினமும் ஒரு மேஜை கரண்டி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீர், பழச்சாறில் கலந்து அருந்தலாம்.
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை
தாய்ப்பால் கொடுக்கும் காலம் ஒவ்வொரு தாய்க்கும் மிகச் சிறப்பான ஒரு தருணமாகும். இந்த நேரத்தில், பல புதிய தாய்மார்கள் தங்கள் உடல் நலத்தை பேணிக்காக்க இயற்கையான மற்றும் சத்தான உணவுகளைத் தேடுகிறார்கள். தாய்ப்பால் பெருக்கி என்பது தானியங்கள், மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்களின் பாரம்பரிய கலவையாகும். இது பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கப் பல வீடுகளில் பயன்படுத்தப்படும் முறையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
தாய்மார்கள் ஏன் அமுத சுரபி-ஐ விரும்புகிறார்கள்? 💖
🌿ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள்: பிரசவத்திற்குப் பிந்தைய உணவுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தானியங்கள், விதைகள் மற்றும் மூலிகைகள் இதில் அடங்கியுள்ளன.
🌿பொதுவான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது : பாலூட்டும் காலத்தில் தாய்மார்கள் தங்கள் வழக்கமான ஊட்டச்சத்து அளவைப் பராமரிக்க இது உதவுகிறது.
🌿இயற்கையான தாதுக்கள் : இதில் உள்ள கேழ்வரகு, நட்ஸ் மற்றும் விதைகளில் இயற்கையாகவே அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அன்றாட உடல் வலிமைக்குத் துணைபுரிகின்றன.
*தயாரிப்பது மிக எளிது: இதை பால், கஞ்சி அல்லது உங்களின் அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
அமுத சுரபி -ன் சிறப்பம்சங்கள் என்ன?
- இயற்கை மூலப்பொருட்கள்.
- பாரம்பரிய உணவு முறைகளைத் தழுவியது.
- ரசாயனங்கள் அல்லது பதப்படுத்திகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
அமுத சுரபியை எவ்வாறு பயன்படுத்துவது ?
உணவுக்கு முன் ஒரு நாளைக்கு 3 முறை சூடான பாலுடன் 1-2 டேபிள் ஸ்பூன் அமுத சுரபியை கலந்து குடிக்கலாம். பாலை வடிகட்டாமல் குடிப்பதே சிறந்தது.
**பாக்கெட் பாலை தவிர்த்து பசும்பால் பயன்படுத்துவது சிறந்தது.
💕தாய்மார்களுக்கு பயனுள்ள குறிப்புகள்
1. உணவைத் தவிர்க்காதீர்கள், பால் உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் சமச்சீரான உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. நீரேற்றத்தை புறக்கணிக்காதீர்கள், நீரேற்றமாக இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
3. அதிகப்படியான காஃபின் & சாக்லேட் உட்கொள்ள வேண்டாம்: காபி அல்லது எனர்ஜி பானங்கள் தூக்கத்தை பாதிக்கும் என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.
4. மன அழுத்தம் தாய்ப்பால் உற்பத்தியை குறைப்பது மட்டுமல்லாமல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக இருங்கள்
குறிப்பு: அரசாங்க விதிமுறைகளின் படி நமது தாய்ப்பால் பெருக்கி என்ற பெயர் அமுத சுரபி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பொறுப்புத் துறப்பு (Disclaimer): இது ஒரு ஊட்டச்சத்து அல்லது மூலிகை உணவுப் பொருள் மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ மாற்றானது அல்ல. இதை ஒரு சமச்சீரான உணவின் (Balanced Diet) ஒரு பகுதியாகப் பயன்படுத்தவும்.
ஆவாரம்பூ தேநீர் - சரும பளபளப்பு மற்றும் சர்க்கரை சமநிலைக்கு
ஆவாரம்பூ தேநீர் - சரும பளபளப்பு மற்றும் சர்க்கரை சமநிலைக்கு
உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நன்மை
பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆவாரம் பூக்களை உலர்த்தி அந்த பொடியில் தயாரிக்கப்படும் இந்த பானமானது தோல் மினுமினுப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளிருந்து பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது அதில் முக்கியமான ஒன்று ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரிய பங்கு வைக்கிறது எந்த ரசாயன கலவையும் இல்லாமல் முழுவதும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை காபின் அல்லாத பானமாக தினமும் அருந்தலாம்.
ஆவாரம்பூ டீயை மக்கள் விரும்பத்தக்க பயன்கள்
🌿ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகை ஆவாரம் பூ
🌿இதில் சேர்க்கப்பட்டுள்ள இஞ்சி மற்றும் சீரகம் செரிமானத்தை ஆதரித்து மேம்பட்ட குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
🌿இதில் உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகள் கொண்டுள்ளதால் உடல் நச்சுக்களையும் நீக்கி தேகத்திற்கு பளபளப்பு கொடுக்க உதவுகிறது
🌿உடல் கொழுப்பை குறைக்க உதவுவதால் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
🌿முழுவதும் இயற்கையான பானம் என்பதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான பானம்
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஆவாரம்பூ தேநீர் உதவியாக இருக்குமா?
நீண்ட காலமாக நமது பாரம்பரத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் சமநிலைப்படுத்த ஆவாரம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது தொடர்ந்து பயன்படுத்துவதால் நிச்சயமாக ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவி புரியும். பாரம்பரிய மருத்துவம் பயிற்சிவித்த முறைப்படியே தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு தயாரித்துள்ளோம்.
தினமும் இந்த பானத்தை அருந்தலாமா ?
நிச்சயமாக தினமும் அருந்தலாம், ஏனெனில் இதில் எந்த வித ரசாயனமும் இல்லை காபின் போன்றவையும் இதில் இல்லை முழுவதுமாக மண்ணில் இருந்து கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் இதனை காலையில் ஒரு முறை அல்லது மாலை ஒரு முறை தாராளமாக பயன்படுத்தலாம்.
எப்படி தயார் செய்வது?
வழக்கமான தேநீர் பொடியைப் போன்றே ஒரு ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ற அளவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் குழந்தைகளுக்காக.
சங்கு மலர் அல்லது சங்கங்குப்பி என்று அழைக்கப்படும் மலர்களை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் சுக்கு, கொத்தமல்லி, சீரகம், சீந்தில், கருப்பு சீரகம், ஏலக்காய், மிளகு கலந்து உருவாக்கிய இந்த சங்கு மலர்பானம் மன அமைதிக்கு பெரிதும் பயன்படக்கூடிய ஒன்று ஏனெனில் நமது முன்னோர்கள் சங்க காலத்தில் இருந்து மன அமைதிக்கு பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் தூக்கமின்மை தொந்தரவை சரி செய்ய வல்லது.
சங்கு மலர் பானத்தின் பயன்கள்
🌿இதில் உள்ள மூலக்கூறுகள், உடலை தளர்வடையச் செய்து மன இறுக்கத்தில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுதலை பெறச் செய்ய உதவுகிறது
🌿சங்கு மலரில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு ஊட்டத்தை அளித்து மிளிறச் செய்ய உதவுகிறது
🌿இதில் சேர்க்கப்பட்ட சுக்கு மற்றும் சீரகம் செரிமானத்தைத் தூண்டி குடல் இயக்கங்களை மேம்படுத்த உதவுகிறது
🌿மேலும் இரத்த சர்க்கரை சமநிலையை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
🌿செறிவான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால் கண் பார்வை மற்றும் இதய நலனை ஆதரிக்கிறது
ஒவ்வொரு நாளும் உங்களை கவனித்துக் கொள்வதற்கான டீ
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வாக நீங்கள் உணர்ந்தால் நமது சங்கம் மலர் பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இது உங்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு நிறைவான மன அமைதியை கொடுப்பது மட்டுமல்லாமல் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களையும் மீட்டெடுக்கிறது. இன்றே வாங்கி பயன்படுத்தி சங்கு மலரின் மருத்துவ குணத்தை அனுபவியுங்கள்.
🍵 எப்படி தயார்செய்வது ?
1. ½ தேக்கரண்டி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்
2. 150 மில்லி தண்ணீர் சேர்க்கவும்
3. குறைந்த நெருப்பில் கொதிக்க வைக்கவும்
4. கலவையை வடிகட்டவும்
5. பருகி ஓய்வெடுக்கவும் (விரும்பினால் கரும்பு சர்க்கரையைச் சேர்க்கவும்)
வழக்கமான காபிக்கு மாற்றாக இயற்கை வழியை தேடுபவர்களுக்கு இது சிறந்த பானமாக அமையும். ஏனெனில் 100% இயற்கையான தேற்றான் கொட்டைகளை பொடியாக்கி தயாரிக்கப்படுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து ஆற்றலுடன் இயங்க வைக்க உதவுகிறது. இதில் எந்தவிதமான ரசாயனமும் இல்லை,காபின் இல்லை, எந்த நிறமூட்டியும் இல்லை, எந்த பக்க விளைவும் இல்லை இக்காரணிகளால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக பயன்படுத்தலாம்
ஏன் இது ஒரு சிறந்த காஃ பி பானம் ?
🌿செரிமானத்தைத் தூண்டி குடல் இயக்கங்களை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது
🌿ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது
🌿இதில் உள்ள சேர்மங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
🌿உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு உடல் சூட்டை தணித்து இளைப்பாற உதவுகிறது
🌿பெண்களுக்கு மாதவிடாய் சமநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
🌿சிறுநீர் அசைவுகரியங்களை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் சிறு காயங்களை சரி செய்யவும் உதவுகிறது
காஃபின் உட்கொள்வதை தவிர்க்க விரும்புவர்கள் தேற்றான் கொட்டை காபியினை தாராளமாக பயன்படுத்தலாம். இது ஒட்டுமொத்த குடும்ப ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் இது ஒரு சிறந்த இயற்கை பானமாக அமையும்.
🍵 எப்படி தயார்செய்வது ?
1. ½ தேக்கரண்டி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்
2. 150 மில்லி தண்ணீர் மற்றும் தேவையான அளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளவும்
3. குறைந்த நெருப்பில் கொதிக்க வைக்கவும்
4. கலவையை வடிகட்டவும்
5. பருகி ஓய்வெடுக்கவும் (விரும்பினால் கரும்பு சர்க்கரையைச் சேர்க்கவும்)
தேங்காய் உருக்கு எண்ணை - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது
தேங்காய் உருக்கு எண்ணை - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது
தேங்காய் உருக்கு எண்ணை ஏன் சிறந்தது?
வழக்கமாக தேங்காய் கொப்பரைகளை பதப்படுத்தி செக்கில் மசித்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக நேரடியாக தேங்காயிலிருந்து தேங்காய் பாலை பிரித்து எடுத்து அதனை பக்குவமாக காய்ச்சி அதில் உள்ள தாதுக்களை சேதப்படுத்தாமல் எண்ணையாக பிரித்தெடுக்கும் முறை உருக்கு எண்ணை. இந்த முறையில் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன
பதப்படுத்துதல் இல்லை | எந்த கலப்படமும் இல்லை
தேங்காய் உருக்கு எண்ணெய் நன்மைகள்
🌿பதப்படுத்துதல் இல்லாமல் தேங்காய் பாலில் இருந்து கிடைக்கப்பெறுவதால் இதன் தூய்மை அதிகம்
🌿குழந்தை சருமத்திற்கு மிகவும் ஏற்றது என்பதால் தினமும் மசாஜ் செய்து வருவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும்
🌿வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலங்கள் (MCFAs) செறிந்துள்ளது
🌿அதிக வெப்பத்தின் காரணமாக இதன் சுவை, தன்மை மாறாத காரணத்தினால் சமையலுக்கு மிகவும் ஏர்புடையது
🌿தலைமுடியை பாதுகாக்க தினமும் தலைக்கு தேய்த்து வரலாம் இதனால் முடி உடைவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக ஏன் பயன்படுத்த வேண்டும்?
செக்கில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெயில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் தேங்காய் உருக்கு எண்ணெய் செக்கில் இருந்து பெறப்படும் எண்னையயை விட தூய்மையானது. அதன் சத்துக்களும் பாதுகாக்கப்படுவதால் தாராளமாக சமையலுக்கு அல்லது குழந்தையின் சருமத்தின் மீது மசாஜ் செய்வதற்கு மிகவும் ஏற்றது.
தேங்காய் உருக்கு எண்ணையின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளோம் மேலும் செக்கு எண்ணெயின் மீது எந்த குறைபாடும் சுட்டிக் காட்டவில்லை. தேங்காய் எண்ணெய் தேர்ந்தெடுப்பது முற்றிலும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டவையே.
பொலிவான மற்றும் ஆரோக்கியமான சரும நிறத்தை பெற விரும்புகிறீர்களா?
எங்கள் முக அமுதம் மஞ்சிட்டி, சிவப்பு சந்தனம், நன்னாரி, குங்குமப்பூ, தேங்காய் எண்ணெய், பசுவின் பால், ஆமணக்கு எண்ணெய், பூசணி எண்ணெய், செம்பருத்தி பூ ,ஆவாரம் பூ போன்ற சரும பொலிவிற்கு உதவக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டது.
ரசாயனம் இல்லாதது | 100%இயற்கையானது
🌸 முக அழுத்தத்தின் சிறப்புகள்
🌿மஞ்சிட்டி ,குங்குமப்பூ சிவப்பு சந்தனம் போன்ற மூலிகைகள் பொலிவிழந்த சருமத்திற்கு ஊட்டத்தை கொடுத்து பொலிவடைய செய்ய உதவுகிறது
🌿சீரற்ற சரும நிறமிகளை சரி செய்து கரும்புள்ளிகளையும் நீங்க உதவுகிறது
🌿உலர்ந்த சருமத்திற்கு நீரோட்டத்தை கொடுத்து மென்மையாக்குவதுடன் வயதான தோற்றத்தையும் குறைக்க உதவுகிறது
🌿கண் கருவளையத்தை போக்கி அழகு பெறச் செய்வதுடன் தோல் சுருக்கங்களையும் கணிசமாக குறைக்க உதவுகிறது
🌿வாசனைக்காக எந்தவித செயற்கை நிறமூட்டியோ அல்லது இரசாயனமோ இல்லாத காரணத்தினால் இதில் எந்த பக்க விளைவும் இல்லை
💧 எப்படி பயன்படுத்துவது
- 5 சொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
- தோலின் மீது வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்
- 1 மணி நேரம் ஓய்வெடுக்கவும்
- அகில் குளியல் பொடி அல்லது அகில் சோப்பு பயன்படுத்தி கழுவவும்
- சிறந்த முன்னேற்றத்திற்கு தினமும் அல்லது வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தவும்.
🛒 பொலிவான சருமத்தை பெற தயாரா?
சந்தையில் கிடைக்கும் ரசாயனம் கலந்த சீரத்தை பயன்படுத்துவதால் நிச்சயமாக தோல் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது மேலும் நீண்டகால பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல எனவே தான் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சீரத்தை பயன்படுத்துவதால் எந்த வித பக்கவிளைவும் இல்லாமல் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெறலாம்.
👉 இப்போதே முக அமுதத்தை ஆர்டர் செய்து, இயற்கையான முறையில் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற தொடங்குங்கள்.
பாத வெடிப்புக்கான இயற்கை நிவாரணி
தேன் மெழுகு, மஞ்சள், வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சுண்ணாம்பு, பூரம் போன்ற பாரம்பரியப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மூலிகைக் கலவை மெழுகு. சேதம் அடைந்த பாத வெடிப்புகளை மென்மையாக்கி இயற்கையாக நிவாரணம் பெற செய்கிறது. இதில் எந்த ரசாயன கலப்பும் இல்லாததால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றது
வலிமையான நிவாரணம்
🌿தேன் மெழுகு, மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெய்யின் ஆற்றல் வாய்ந்த கலவையானது, ஆழமான பிளவுகள் மற்றும் கடினமான திட்டுகளை ஆற்ற உதவுகிறது
🌿ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேன் மெழுகு ஈரப்பதத்தை அளித்து, முதல் பயன்பாட்டிலிருந்தே வறண்ட மற்றும் கடினமான சருமத்தை மென்மையாக்குகிறது
🌿பிளவுபட்ட பாதங்களால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது
🌿வேப்ப எண்ணெய் சேதமடைந்த சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
இந்த மெழுகை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- இயற்கையான, இரசாயனம் இல்லாத பொருட்களால் ஆனது.
- தினசரி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது.
- வறண்ட, பிளவுபட்ட அல்லது கடினமான பாதங்களுக்கு ஏற்றது.
- பழமையான பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டது
பயன்படுத்தும் முறை:
1.உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி நன்கு துடைக்கவும்.
2.சிறிதளவு கிரீமை எடுத்து, பிளவுபட்ட பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
3.சிறந்த பலனைப் பெற, தினமும் இரவு உறங்குவதற்கு முன் பயன்படுத்தவும்.
வாயு சூரணம் - வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் நிவாரணி
வாயு சூரணம் - வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் நிவாரணி
மலச்சிக்கல் மற்றும் வாயு அசௌகரியத்தால் அவதிப்படுகிறீர்களா?
இதற்கான தீர்வும் இயற்கையே நமக்கு அளிக்கிறது, நிலவாகை இலை, உலர் இஞ்சி, மிளகு, திப்பிலி, பெருங்காயம், ஏலக்காய், இமயமலை உப்பு, வாய்விளங்கம் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வாயு சூரணத்தில் உள்ள தாதுக்கள் வயிற்று தொந்தரவுகளான வாயு, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற அனைத்தையும் தீர்க்கக்கூடிய தன்மை இதில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி தயாரான வாயு சூரணம், எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது
வாயு சூரணம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்?
🌿 மலச்சிக்கல் நிவாரணம் மட்டுமல்லாமல் குடல் இயக்கங்களை ஒழுங்கு பெற செய்ய உதவுகிறது
🌿 வயிறு ஊத்தம் மற்றும் ஏப்பத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் பெற வழிவகை செய்கிறது
🌿 வாய்வுத் தொல்லையால் பிடிப்பு போன்ற அசௌகரியத்தை போக்க வல்லது
🌿 செரிமான சமநிலையை மீட்டெடுத்து சத்துக்களை குடல் உறிஞ்சிகள் உறிஞ்ச உதவுகிறது
🌿 உடல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமான வாழ்வியலை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது
லேசாக உணருங்கள்
பெரியவர்கள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்கக்கூடிய முக்கியமான மூலிகை நிவாரணி ஏனெனில் ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையால் அவதிப்படும் வயதானவர்களுக்கு எமது வாயு சூரணம் சிறப்பாக செயல்பட்டு விரைவான நிவாரணம் பெற உதவுவதோடு மட்டுமல்லாமல் சௌகரியமான உணர்வை கொடுப்பதால் நிம்மதியுடன் வாழ வழிவகை செய்கிறது. முற்றிலும் இயற்கையானது என்பதால் குடும்பத்தில் எவரேனும் பயன்படுத்தலாம் வயது தடையில்லை.
🥛எவ்வாறு பயன்படுத்துவது?
👱🏼♂️15 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு தேக்கரண்டி வாயு சூரணம் எடுத்து ஒரு டம்ளர் ( 200ml) வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கவும்
👶🏼15 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அரை தேக்கரண்டி வாயு சூரணம் எடுத்து தேனில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு உண்ணலாம்
இஞ்சி பானம் - இஞ்சி மற்றும் பூண்டுடன் இயற்கை செரிமானத் துணை
இஞ்சி பானம் - இஞ்சி மற்றும் பூண்டுடன் இயற்கை செரிமானத் துணை
7-மூலிகை சூப்பர் கலவை
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், ஆப்பிள் சைடர் வினிகர், மருதம் பட்டை மற்றும் சர்ப்பகந்தா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை சூத்திர பானம். இது உங்களை ஒவ்வொரு நாளும் லேசாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர வைக்க உதவுகிறது.
- ரசாயனங்கள் இல்லை (No Chemicals)
- செயற்கை சுவையூட்டிகள் இல்லை (No Artificial Boosters)
🌿 இஞ்சி பானம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
⭐ உணவுக்குப் பிந்தைய சௌகரியமான அனுபவத்தை ஆதரிக்கிறது - இஞ்சி மற்றும் பூண்டில் உள்ள வெப்பமூட்டும் கூறுகள் உணவருந்திய பிறகு உடல் இதமாகவும், சீராகவும் இருப்பதை உறுதி செய்யப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
⭐ இயற்கையான செயல்முறைகள் - ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் இஞ்சி போன்ற பாரம்பரியப் பொருட்கள், உடலின் இயற்கையான சுத்திகரிப்பு வழிமுறைகளுக்கு ஆதரவளித்து, உள்ளிருந்து ஒரு தெளிவான உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
⭐ பாரம்பரியப் பொருட்களால் தயாரிக்கப்பட்டது - இதில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் பாரம்பரிய ஆரோக்கிய முறைகளில் ஆழமாக வேரூன்றியவை. இவை உடலுக்கு சௌகரியத்தை அளிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
⭐ தினசரி வாழ்விற்கான ஆரோக்கிய டானிக் - உங்கள் வயிறு மற்றும் உடல் சீராக இருக்கும்போது, உங்கள் நாள் முழுவதும் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்.
🔥 இதை அருந்தும்போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?
இதை அருந்திய உடனேயே, உங்கள் உடலில் ஒரு மெல்லிய கதகதப்பு பரவுவதை உணர்வீர்கள், இது மூலிகைகள் உங்கள் உடலில் வேலை செய்யத் தொடங்குவதன் அறிகுறியாகும்.
தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் பெரும்பாலும் கூறுவது:
🌱 உடல் லேசாக இருக்கிறது.
🌱 மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சியாக உள்ளது.
🌱 அன்றாட வேலைகளில் அதிக ஈடுபாடு கொள்ள முடிகிறது.
குறிப்பு : வயிற்றுப்புண், அல்சர் உடையவர்கள் எங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்தலாம்
தொடர்புக்கு : 9487261280
பொறுப்புத் துறப்பு (Disclaimer): இது ஒரு இயற்கையான உணவுத் துணைப்பொருள் மட்டுமே. இது மருத்துவ மருந்து அல்ல. இது எந்த நோயையும் குணப்படுத்தும் என்று உத்தரவாதம் அளிக்கவில்லை. மருதம் பட்டை மற்றும் சர்ப்பகந்தி போன்ற மூலிகைகள் ஆரோக்கியத்திற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன, மருத்துவ சிகிச்சைக்காக அல்ல. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே பயன்படுத்தவும்.
Kit Products – இதில் உள்ள பொருட்கள்
1.Muthiyar koonthal hair oil – முதியார் கூந்தல் எண்ணெய்
2.Hair cleanser – முடி சுத்தபடுத்தி
3.Hair growth Intake – முடி வளர்ச்சி ஊக்கி
Muthiyar koonthal hair oil
1.Muthiyar Koonthal Hair Oil Eliminates hair loss, grey hair, itching, split end, headaches, dandruff, watery eyes, clears eyesight and encourage healthy and long hair growth.
2.Helps hair to retain more moisture and helps to prevent split ends
3.Muthiyar Koonthal Hair Oil Provides vital hydration to scalp that may help to reduce itching and dandruff
4.Muthiyar Koonthal Hair Oil Helps to strengthen hair roots, detangles tresses and improve appearance of silkiness and shine in hair
5.Muthiyar Koonthal Hair Oil Contains multiple Herbs like muthiyar koonthal, karisaalai, vetiver Amla, Mulethi, Neel Patra,blackseed.
6.100% Natural Hair Oil. Paraffin Free/ Mineral Oil / SLS Paraben Free Muthiyar Koonthal Hair Oil Non sticky, non greasy formulation that could be left on hair through the day with confidence.
Direction of use:-
Take few drops of muthiyar koonthal oil and gently apply on your scalp and hair, do not handle your hair rough
1.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, பொடுகு, கண்ணெரிச்சல்,கண்ணில் நீர் வடிதல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
2.முடி அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது
3.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவும்
4.முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது
5.பட்டு போல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கூந்தல் வழவழப்பாக பிரகாசிக்க உதவுகிறது
6.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலமில் கரிசாலை, வெட்டிவர், நெல்லிக்காய், கருஞ்சீரகம், செம்பருத்தி, வெந்தயம், மிளகு, கீழாநெல்லி, ஆலம் விழுது போன்ற பல மூலிகைகள் உள்ளன.
7.100% இயற்கை எண்ணெய். பாரஃபின் / மினரல் ஆயில் போன்ற தீங்கு தரும் பொருட்கள் இல்லை.
8.முகத்தில் எண்ணெய் வழியாது, பிசுபிசுப்பாய் இருக்காது, தினமும் பயன்படுதலாம்.
உபயோகமுறை :-
சில சொட்டுகள் உள்ளங்கையில் எடுத்து முடியின் வேர்கால்களில் படும்படி தேய்க்கவும்
Hair Cleanser
1.Suitable for: All hair types , 100% Pure/Organic. Hand made powdered
2.Powder is commonly mixed into a paste, by mixing it with water or rose water based on the availabiliy
3.1 tablespoon Hair Pack powder Mix well with water and apply on hairs. You can use as per your requirement or with different combinations
4.This Product is suitable for :- For Hair Fall , For Making Hair Strong, For Dandruff Flakes, For Split Ends, For Hair Greying and/or Whitening, For Dry Brittle Hair, For Sticky Oily Hair, For Hair’s Shine, 5.For Thick Growing Hair, For Soft & Silky Hair
6.Both Mens and Womens can use. Apply on hairs and you will see good results.
1.அனைத்துவகையான முடிக்கும் ஏற்றது,100% பக்குவமாக சுத்தமாக எந்தவித ரசாயணமும் சேர்க்கபடவில்லை
2.பொடியானது தண்ணீர் அல்லது ரோஜா தண்ணீரில் கலந்து உபயோகபடுத்தலாம்
3. 1 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு பயன்படுதலாம் , உங்கள் முடியின் அளவை பொறுத்து மாறுபடும்
4.இது முடி உதிர்தல் , தலை சொறிதல், அரிப்பு, பொடுகுதொல்லை, பேன் தொல்லை, முடி வெடிப்பு , புழுவெட்டு , கிருமியினால் முடி உதிர்தல் போன்றவைகளுக்கு பயன்படுதலாம்
5.முடி அடர்த்தியாக வளரவும் நீண்டு வளரவும் அனைவரும் பயன்படுதலாம்
6.ஆண் பெண் இருவரும் பயன்படுதலாம்
Hair growth intake
முடி வளர வெளிஉபயோகமாக எண்ணெயோடு சேர்த்துஉடலுக்கு தேவையான சத்தையும் கொடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிட்டும். இந்த மூலிகை பொடி எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.
பயன் :-
இளநரை, முடி உதிர்தல், தலை ஊறல், முடி வெடிப்பு, அடர்த்தி குறைவு,இரத்த குறைவினால் முடி உதிர்தல் போன்றவை சரியாகும் .
முடி சுத்திகரிப்பான் - ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு
முடி சுத்திகரிப்பான் - ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு
உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இரசாயனம் இல்லாத, மென்மையான வழியைத் தேடுகிறீர்களா?
எங்களின் மூலிகை கூந்தல் சுத்திகரிப்புப் பொடி, சீயக்காய், நெல்லிக்காய், அரப்பு, வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களால் ஆனது. இவை கூந்தலுக்கு சிறந்த சுத்திகரிப்பையும், பாதுகாப்பையும் தருகின்றன. இது தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல், அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் தேவையற்ற கசடுகளை நீக்க உதவுகிறது.
இது அனைத்து விதமான கூந்தலுக்கும் ஏற்றது, தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது.
மென்மையான பராமரிப்பு, சிறந்த பலன்கள்
🌿கூந்தல் சுத்திகரிப்பு: முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல், அழுக்கு, எண்ணெய் மற்றும் கசடுகளை நீக்கி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
🌿பொடுகு மற்றும் அரிப்பு: வேப்பிலை மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்ற மூலிகைப் பொருட்கள், பொடுகு மற்றும் அரிப்புத் தொல்லையைக் குறைக்க உதவுகின்றன.
🌿கூந்தல் உதிர்வு: முடியின் வேர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான உச்சந்தலைக்கு வழிவகுக்கிறது, இதனால் முடி உடைவது மற்றும் மெலிவது குறைகிறது.
🌿இயற்கையான பளபளப்பு: உங்கள் தலைமுடியை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், இயற்கையான பளபளப்புடனும் வைத்திருக்க உதவுகிறது - கண்டிஷனர் தேவையில்லை!
🌿கூந்தலுக்கு மிருதுவான தன்மை: இந்த மூலிகை பொடி கூந்தலுக்கு ஊட்டமளித்து, முடிக்கு மென்மையான மற்றும் மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது.
🌿பசையற்ற உச்சந்தலை: இயற்கையான முறையில் சுத்தம் செய்வதால், உச்சந்தலையில் எண்ணெய் பசைத் தன்மையைக் குறைத்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
👉இரசாயன ஷாம்பூக்களிலிருந்து இந்த மூலிகை சுத்திகரிப்பிற்கு ஏன் மாற வேண்டும்?
இரசாயன ஷாம்பூக்கள் உங்கள் கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலும், அவை பெரும்பாலும் இயற்கையான எண்ணெய்களை நீக்கி, கூந்தலை வறண்டு, உயிரற்றதாக மாற்றுகின்றன. ஆனால், எங்களின் மூலிகை கூந்தல் சுத்திகரிப்புப் பொடி, பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உச்சந்தலைக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல், கூந்தலுக்கு ஊட்டமளித்து, ஒவ்வொரு முறை கழுவிய பிறகும் மென்மையாகவும், இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
❤️யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது
- முடி உதிர்தல் மற்றும் மெலிதல்
- பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு
- இளநரை
- வறண்ட, மந்தமான அல்லது எண்ணெய் பசையுள்ள கூந்தல்
பயன்படுத்தும் முறை:
1. ஒரு தேக்கரண்டி முடி சுத்திகரிப்பான் பொடியை எடுத்துக் கொள்ளவும்.
2. தண்ணீர் அல்லது ரோஸ் தண்ணீருடன் கலந்து மென்மையான பசை போல் செய்யவும்.
3. கூந்தலில் அனைத்து பகுதிகளிலும் தோலின் மீது நன்கு படும்படி தடவவும்.
4. 5-10 நிமிடங்கள் விட்டு, பின்னர் நன்கு அலசவும். (சிறந்த பலன்களுக்கு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்).
